யாழில் இரண்டாம் கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை கொரோனா தடுப்பூசி

images 14
images 14

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதல் கட்டமாக சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற 50 ஆயிரம் பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கும் பணி வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகவலை பிரதமரின் இணைப்புச் செயலளர் கீதானந்தன் காசிலிங்கம் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில் 50 ஆயிரம் பொதுமக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு ரீதியில் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டது.

அவ்வாறு முதல் டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸை வழங்கும் பணி வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்காக சுகாதார அமைச்சினால் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.