47வது கோபா கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டியில் பிரேசிலை வீழ்த்தி லயனல் மெசீ தலைமையிலான ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.
பார்வையாளர்கள் இன்றி பிரேசிலில் இந்த போட்டி இடம்பெற்றது.
போட்டியில் முதல் பாதியின் 22 வது நிமிடத்தில், ஆர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு புள்ளி ஒன்றை பெற்று கொடுத்தார்.
இதனால் முதல் பாதியில் ஆர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்டினா அணி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.