முல்லைத்தீவு வண்ணாங்குளத்தினை சேர்ந்த வயோதிபர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு நகர் வண்ணாங்குளத்தினை சேர்ந்த 61 வயதுடைய சைமன் அன்ரன் மொறிஸ் செல்வராசா என்வரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 21 ஆம் திகதி சளி,தெண்டை இருமல்,காச்சல் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் மின்சார சுடலையில் எரியூட்டுவதற்காக வவுனியாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது