அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் மறைவுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.