டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக செயற்படவுள்ள ரிஷாப் பாண்ட்!

download 1 2
download 1 2

நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்காக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரிஷாப் பாண்ட் செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு உபாதை ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்காக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரிஷாப் பாண்ட் தலைவராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

எனினும், தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் உபாதையில் இருந்து மீண்ட நிலையில் எஞ்சிய போட்டிகளில் அவரும் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த தொடருக்கு டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரிஷாப் பாண்ட் தான் செயற்படுவார் என அந்த அணி தகவல்கள் தெரிவிக்கின்றன.