வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பகுதிக்குட்பட்ட கற்குளம் பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் மற்றும் கோவில்குளம் மஹாவிஷ்ணு ஆலயப் பிரதமகுருக்களாக விளங்குகின்ற சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களினால் புதிய வீடு ஒன்று கட்டி நேற்றையதினம் மாலை சம்பிரதாய பூர்வமாக அக்குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டது.
சுவிஸ் நாட்டில் வாழும் பிரதமகுரு அவர்களின் நண்பர் பாலேஸ்வரன் அவர்களின் உதவியோடு இவ்வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி சபர்ஜா மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் சிவகஜன் மற்றும் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் லதா ஆகியோர் கலந்துகொண்டனர்.