பால்மா கொள்வனவு செய்யும் பொழுது, ஆறு யோக்கட்டுகள் வாங்குவது அவசியமானது என கட்டாயப்படுத்திய வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் விவகார சபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியத்தலாவை பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.