ஹவுங்கல்ல காவல்நிலையத்தில் சேவையாற்றி, ஓய்வூதியத்திற்கு முந்திய விடுமுறையில் இருந்த உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்த குறித்த நபர் ஊரகஸ்மங்ஹந்திய – தே வத்த பகுதியை சேர்ந்த 59 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.