கொரோனாவால் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் மரணம்!

coronadeath 1622004511
coronadeath 1622004511

ஹவுங்கல்ல காவல்நிலையத்தில் சேவையாற்றி, ஓய்வூதியத்திற்கு முந்திய விடுமுறையில் இருந்த உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்த குறித்த நபர் ஊரகஸ்மங்ஹந்திய – தே வத்த பகுதியை சேர்ந்த 59 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.