கெக்கிராவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக பதவி வகிப்பதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றினை விடுத்து இதனை குறிப்பிட்டுள்ளது. நந்தரதன தேரர் தற்போது பிரதமரின் ஆலோசகராகவோ அல்லது வேறு எந்தவொரு பதவியும் வகிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.