இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவுள்ள கிரிக்கெட் சுற்றுப் பயணம் தொடர்பில், மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென அந்த நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து அணி கைவிட்டுள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலங்களுக்குள் இது குறித்து தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை நேற்று தெரிவித்துள்ளதென வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.