கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவலை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்று முதல் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதுவரை 107 பேர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.