சிங்களத்தில் மட்டும் தான் தேசியகீதம் – அரசு திட்டவட்டம்

4 had
4 had

புதுவருடத்தில் நடாத்தப்படவுள்ள 72 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பில் கூறியுள்ளார்.

புதுவருடத்தின் சுதந்திர தினத்தை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோரை கௌரவப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் மற்றும் கொழும்பு நகர சபை என்பவற்றின் தலைமையில் ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினரின் சுதந்திர தின ஒத்திகை நிகழ்வுகளையும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.