நிமல் சிறிபால டி சில்வா – பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

1 british
1 british

நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹூல்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

நீதி அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், புதிய அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய சட்ட மறுசீரமைப்புக்கள் பற்றியும் குறிப்பாக சிறைச்சாலைகள் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.