இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 45ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதிவருகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக வெங்கடேஷ் ஐயர் 67 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அர்ஷ்தீப் சிங் 32 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது.