லங்கா சதோச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (12) வெலிசரை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த சந்தேகநபர்கள் நேற்று (11) கைது செய்யப்பட்டனர்.