புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் செங்கல்ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (13) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீரகெலேவத்தை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.