பங்களாதேஸ் அணிக்கு எதிரான மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் விலகியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கட் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
அவருக்கு பதிலாக பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் இப்திகார் அஹமட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
அணியின் இளையவர்கள் சர்வதேச அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குவதற்காகத் தாம் இந்த தொடரிலிருந்து விலகுவதாக மொஹமட் ஹபீஸ் அறிவித்திருந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இடம்பெற்றிருந்த 18 வீரர்களின் 17 பேர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் பாகிஸ்தான் குழாமில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.