இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது காயமடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போட்டியின் 23 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் இலங்கை அணியின் தலைவர் திமுத்தினால் எதிர்கொள்ளப்பட்ட பந்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் ஜெரமி சொலொசனோவை தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த வீரர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெரமி சொலொசனோவின் முதல் டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.