நத்தார் வார இறுதியில் சர்வதேச ரீதியாக சுமார் 5,700 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆய்வுகளின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக பயணத்தை ஆரம்பித்துள்ளன.
ஒமைக்ரொன் வைரஸ் திரிபு பரவல் காரணமாக நத்தார் விடுமுறை பயணங்கள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தரவுகளின் அடிப்படையில் நத்தார் பண்டிகை தினமான நேற்று(25) சர்வதேச ரீதியாக 2,500 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 870 விமானங்கள் அமெரிக்காவில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவிருந்தன.
அத்துடன் நேற்றைய தினம் 4,200 விமானங்கள் தாமதமாக பயணத்தை ஆரம்பித்தன.
சர்வதேச ரீதியாக நேற்று முன்தினம் 2,400 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன் 11,000 விமான சேவைகள் தாமதமடைந்தன.