வவுனியாவில் பாடசாலையில் புகுந்து ஆசிரியரை தாக்கியமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் காவற்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்திற்குள் சென்ற மூவர் ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் ஆசிரியர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆசிரியரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.