திருகோணமலையில் வீசிய மினி சூறாவளி – 11 வீடுகள் சேதம்!

trinco 1
trinco 1

நேற்று மாலை திருகோணமலை – பம்மதவாச்சி பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் பதினொரு வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்த போது தாங்கள் சந்தோஷமாக இருந்ததாகவும் , எனினும் இந்த மினி சூறாவளியால் வீடுகள் சேதமாக்கப்பட்டமை மிகவும் கவலையளிப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் மானிய அடிப்படையில் வழங்கிய கடன்களை பெற்று வீடுகளை நிர்மாணித்து வந்தவேளை இயற்கை அனர்த்தத்தில் தமது வீடுகள் சேதமடைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட 11 வீடுகளையும் புனரமைப்பதற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் உடனடியாக கவனம் எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.