இலங்கையில் இருந்து மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், புகலிடம் கோரி தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக படகு மூலம் பயணித்த அவர்கள், இன்று காலை தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கடற்கரையை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் ஒருவர் உட்பட இரண்டு ஆண்களும், பெண் ஒருவரும் இவ்வாறு தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த இலங்கையர்களை மீட்ட கரையோர காவல்துறையினர், இராமேஸ்வரம் கரையோர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.