கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த இரண்டரை வயது குழந்தை பலி

1683705176 Kinaru 2
1683705176 Kinaru 2

இரண்டரை வயது குழந்தை ஒன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ். இளவாலை வசந்தபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்று (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்துள்ளதாக காவற்துறையினர் கூறினர்.

யாழ். தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள குழந்தையின் சடலம், உறவினர்களிடம் இன்று (10) கையளிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.