வவுனியா, புளியடி பகுதியில் கிணற்றிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
இன்று (6) காலை குறித்த மூதாட்டியை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.
இதன்போது வீட்டிற்கு அண்மையில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் அவர் சடலமாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொள்கின்றனர் .