நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மன்னார் ஏ32 சங்குபிட்டி மன்னார் வீதி மூன்றாப்பிட்டி பாலியாற்றுப் பகுதியில் இன்று (11) பிற்பகல் 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த பாலியாற்றை சேர்ந்த வாகன சாரதி பத்மநாதன் சிவஜெகன் முழங்காவில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் இலுப்பைக்கடவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.