அனைத்து ஐ.தே.க அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (21) இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ள கலந்துரையாடலிற்கு சஜித்தின் அறிவுறுத்தலுக்கமைய நாடு முழுவதிலுமுள்ள ஐ.தே.க அமைப்பாளர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சஜித்தின் ஏற்பாட்டில் இன்று அமைப்பாளர்கள் கூட்டம் இடம்பெறுவது குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு கூட்டமும் இன்று காலை நடைபெறவுள்ளது.