டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்குரிய, சுவிஸ்லாந்தின் ரோஜர் ஃபெடரர், தனது ஓய்வுக் குறித்து மனம் திறந்துள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச்சிடம் 6-7, 4-6, 3-6 என்ற செட் கணக்குகளில் தோல்வியடைந்தார்.
இப்போட்டியில் காயம் காரணமாக ஃபெடரர் அவதிப்பட்டதால் அவரால் முழு ஈடுபாட்டுடன் விளையாட முடியாமல் போனது.
கடந்த காலங்களில் பெரிதளவில் சேபிக்காத ரோஜர் பெடரர், இந்த தோல்வியின் விரக்த்தியினாலும், வயது மற்றும் உடற்தகுதியை கருத்திற் கொண்டு ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், போட்டியின் தோல்விக்கு பின் கருத்து தெரிவிக்கும் போது, ஓய்வு எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ”என்னால் தொடர்ந்து விளையாடி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். தற்போது ஓய்வு குறித்து எந்த திட்டமும் இல்லை” என கூறினார்.