யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி புதிய தொழில் நுட்ப வளங்களுடன் புதிய பரிமாணம் பெற இருக்கிறது .
ஒவ்வொரு வகுப்பறையும் தொழில்நுட்ப கணனி மயமாக்கலுக்கு உட்படுத்தப்படுகிறது .
இலத்திரனியல் சூழல் உலகம் முழுவதும் பரவி வருகிறவகையில் மாணவர்களை சிறந்த இலத்திரனியல் அறிவுடன் கூடிய இலகு வழி கற்கைக்கு உட்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட் போட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வகுப்பறையும் பல இலட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடதக்கது.
ஏனைய அனைத்து வகுப்புகளுக்குமான ஸ்மார்ட் போட் நிறுவல்கள் இரண்டு வாரத்துக்குள் நிறைவடையும் என பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.