தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் தேர்தலில் வெல்லக் கூடிய பெண்வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தலில் வெல்லக் கூடிய பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதில்லையே என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், இம்முறை அவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டு அக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ்க் குரலுக்கு வழங்கிய நேர்காணலின் முழுவடிவம்: