வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இப்புதிய கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது. இக் கூட்டணியில் க.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன அங்கம் வகிக்கின்றன.