2500 ரூபா அபராதம் கட்டவழியில்லாமல், 7 வருட சிறைவாசம் சென்ற முதியவர்

2 n
2 n

சிட்டை எடுக்காமல் இரயிலில் பயணம் செய்தமைக்காக ஏழு வருடங்களுக்கு முன்னர் சிங்கள இனத்தை சார்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் .

அவர் தனது மகனின் விபத்து செய்தி அறிந்து அவசரமாக ரயிலில் ஏறி பயணித்துள்ளார் ,மிகுந்த வறுமையில் இருந்த அவருக்கு அப்போது நீதி கிடைக்கவில்லை .

2500 ரூபாவை பொலிஸ் அபராதமாக விதித்தது அபராத தொகையை கட்ட முடியாமையால் அவர் ஏழு வருடங்கள் சிறை வாசம் அனுபவித்துள்ளார் .

அண்மையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் விடுதலையான கைதிகளோடு இவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .