கொரோனாவின் தொற்றுக்கு இலங்கையில் 10 பேர் இலக்கு

1 f 1
1 f 1

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார்.

முன்னதாக, இன்று பகல், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 7 ஆக  அதிகரித்துள்ளது எனச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் இன்று மாலை, கந்தக்காடு தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்து பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 42 வயதான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 56 வயதான பெண் ஒருவருக்கும், அவரின் உறவினரான 17 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது சற்றுமுன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.