பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட கினிகம பகுதியில் சிறுமியொருவரின் கையிலிருந்த பொருளொன்றில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக காயமடைந்துள்ளார்.
கினிகம பகுதியில் வீடொன்றில் இன்று (7) குறித்த வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த சிறுமி தற்போது தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் (11) வயதுடைய சிறுமியே இவ்வாறு காயமடைந்துள்ளதுடன் இவர் விளையாடுவதற்காக கையில் வைத்திருந்த பொருள் வெடித்துள்ளது.
இது குறித்து பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேலதிக விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.