கோதுமை மாவுக்குள் 15,000 ரூபாயை வைத்துக் கொடுத்த நடிகர்

i3 2
i3 2

கொரோனா ஊரடங்கு காரணமாக பல சினிமா பிரபலங்கள் பல்வேறு விதமான உதவிகளை நாடு முழுவதும் செய்து வருகிறார்கள். பாலிவுட் நடிகரான ஆமீர்கான், கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் 15,000 ரூபாயை வைத்துக் கொடுத்தார் என கடந்த வாரம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதற்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார் ஆமீர்கான். “கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் வைத்துக் கொடுக்கும் மனிதன் நானல்ல. அது முற்றிலும் ஒரு தவறான கதை. அந்த ராபின் ஹுட் தன்னை வெளிப்படுத்தக் கூடாது என விருப்பப்பட்டிருப்பார்,” என்று டுவிட்டரில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இப்படி பல கதைகள் வாட்ஸ் அப்பில் உலா வந்து கொண்டிருக்கின்றன. பலரும் அதை உண்மை என நம்பி அப்படியே ஷேர் செய்து வருகின்றனர். ஊரடங்கு முடிவதற்குள் இம்மாதிரியான பல கதைகளை நாம் இன்னும் படிக்க வேண்டியிருக்கும்.