சமல் ராஜபக்ச மாற்று ஏற்பாடாகத் தான் தேர்தல் செயலகத்தில் கட்டுப் பணம் செலுத்தியிருந்தார் என பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமைந் தால் மாற்று ஏற்பாடாக சமல் ராஜபக்சவைப் போட்டியில் நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
எனினும், கோத்தபாய ராஜபக்rவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வெளியானதை அடுத்து, சமல் ராஜபக்ச போட்டியிடவேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யமாட்டார் என்றும் மஹிந்த கூறினார்.
அதேவேளை, கோத்தபாயய போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாகவே சமல் ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தினார் என்று விமல் வீரவன்ஸவும் உறுதி செய்துள்ளார்.