முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டின் ஏப்ரல் 21 தாக்குதலுக்கு தாம் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
அப்போது பொறுப்புக்கூறவேண்டி இருந்தவர்களுக்கு பணித்தடை விதிக்கப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெறுகின்றது.
எனவே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு தான் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்றும், பொறுப்பு வாய்ந்தவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினதும், பிரதமரினதும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூட அந்தத் தகவல் வழங்கப்பட்டிருக்கவில்லையாயின், ஜனாதிபதியும், பிரதமரும் அதனை எவ்வாறு அறிவார்கள் என்றும் மைத்திரிபால சிறிசேன வினவியுள்ளார்.