கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் (178) பேர் நாட்டை வந்தடைந்தனர்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானத்தில் இவர்கள் முற்பகல் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் மாலைதீவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்களில் பணியாற்றினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தளை விமான நிலையத்தில் வைத்து இவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் முடிவுகள் கிடைக்கும் வரை, விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் இவர்கள் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.