நாட்டில் எதிர்வரும் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 05 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.