அமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வெள்ளவத்தையில் இன்று நடைபெற்றுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அமரபுர மகா சங்கத்தின் அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள் மகா சங்கத்தினர், கடற்படைத் தளபதி, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.
இதன்போது, சேர் சிறில் டி சொய்சாவை நினைவுகூர்ந்து அவரது நிழற்படத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பிரதாயப்பூர்வ நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்தக் கட்டட நிர்மாண பணிகளுக்காக கடற்படை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.