கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் மர்மப்பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகமான ஹூப்ளி ரயில் நிலையத்தில் நேற்று பிற்பகலில் மர்மப்பொருள் வெடித்தது. நடைமேடை எண் ஒன்றில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பக்கெட்டில் இருந்த டிபன் பாக்ஸ் வெடித்ததில், மூன்று பேர் காயம் அடைந்தனர். அந்த பக்கெட்டில் கானப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.அஞ்சலி நிம்பல்கரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினரும், மாநில ரயில்வே போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பக்கெட்டை விட்டுச் சென்றவர் குறித்தும், வெடித்த பொருள் என்ன என்பது குறித்தும் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக Saadiq Kuppelur என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது.