தங்கல்ல கடலில் நேற்றைய தினம் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் நீராடச் செல்லும் போதே குறித்த நபர் இவ்வாறு நீரில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
பெலியத்த பகுதியில் உள்ள 7 நண்பர்கள் நேற்று 22 மதியம் தங்கல்ல கொயம்பொக்க கடலுக்கு நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த குழுவில் உள்ள இரண்டு நபர்கள் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன்போது ஒருவர் அதிஸ்டவசமாக தப்பிப் பிழைத்துள்ளார்.
இவர் தற்போது தங்கல்ல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றைய இளைஞனின் சடலம் இன்று காலை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் மாத்தறை தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் 21 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.