சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக கட்டட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீரற்ற கலநிலையின் காரணமாக பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது .
கொழும்பு ஆமர் விதி, தும்முல்ல சந்தி உள்ளிட்ட சில இடங்களில்மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதாவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன .