மான் இறைச்சியுடன் ஒருவர் கைது

pulliman
pulliman

வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைப்பகுதிக்கு உட்பட்ட மஹலிந்தவேவா, தலவா கால்வாய் பகுதியில் ஒருதொகை புள்ளிமான் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

வில்பத்து தேசிய பூங்காவின் குகுல்கடுவ வனவிலங்கு அலுவலகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் பொறிகள் , கத்தி உள்ளிட்ட உபகரணங்களும், ஒருதொகை புள்ளிமான் இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த குகுல்கடுவ வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.