நாட்டின்சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய வானிலை தொடர்பில் கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி கணபதிப்பிள்ளை சூரியகுமரன் கூறியதாவது
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அத்துடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் 50 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .