தமிழ் மக்களது இருப்பை பாதுகாக்கும் வகையில் மொனறாகலையில்இடம்பெற்ற ஊடக சந்திப்பு !

MONERAGALA 2
MONERAGALA 2

தமிழ் மக்களது இருப்பை பாதுகாக்கும் வகையிலான மொனறாகலை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

மொனறாகலை மக்கள் அபிவிருத்தி அமைப்பு இதனை ஒழுங்கு செய்திருந்தது.

மொனறாகலை நகரம், மரகலை மலைத்தொடர், கும்புக்கன் போன்ற பகுதிகளிலும், நமுனுகலை – தன்னகும்புற மற்றும் கந்தசேனை ஆகிய இடங்களிலும், கமேவலை மற்றும் பிபில தோட்டம் ஆகிய 4 பிரதேசங்களில் தமிழ் மக்கள் சிதறிவாழ்கின்றனர்.

அவர்களது காணி உரிமைகள், தொழில் உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி ஊடக சந்திப்பு ஒன்று இன்று மொனராகலையில் நடைபெற்றது.

இதன்போது, தாங்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நீண்டகாலமாக தீர்வை எதிர்நோக்கி இருப்பதாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.