பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி புகையிரதத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தால் 74 பேர் இதுவரை உயிரிழந்தனர். நேற்றுவரை 70 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
புகையிரதத்தின் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ பரவியிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.