செப்டம்பர் 23 ஆம் திகதிக்கு பின்னர் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிந்த எந்த ஒரு நபருடனும் நெருங்கிய தொடர்பினை பேணிய அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, மினுவங்கொடை கொரோனா கொத்தணி 1083 ஆக அதிகரித்துள்ள நிலையில், அதன் அநேகமான ஊழியர்கள் தற்போதைய நிலையில் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.