மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 05 ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 9748 மாணவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொரோனோ தொற்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோற்றியுள்ளனா்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தோற்றவுள்ள மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய சுகாதார நடைமுறையின் கீழ் பரீட்சை நிலையங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பரீட்சை நடைபெறுகின்றது
இதனையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி , கல்குடா , பட்டிருப்பு , மண்முனை மேற்கு ஆகிய 05 வலயங்களில் 103 பரீட்சை நிலையங்களிலும் 13 இணைப்பு பரீட்சை நிலையங்களில் 9748 மாணாவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்
இன்று பரீட்சைக்கு தோற்ற பரீட்சை நிலையங்களுக்கு சுகாதார வழிமுறைகளான முகக்கவசம் அணியாது வந்த மாணவர்களின் பெற்றேர்களை பொலிசார் திருப்பிஅனுப்பி முகக்கவசம் எடுத்துவரப்பட்டு மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அனுமதிகப்பட்டனர்.
இதே வேளை சுகாதார வைத்திய அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பு நடைமுறையின் கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் 2, 936 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .