பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ள ஜாலிய சேனாரத்ன!

சேனாரத்ன 720x380 1
சேனாரத்ன 720x380 1

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக செயல் பொலிஸ் அதிபர் சி.டி.விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இடமாற்றப்பட்டுள்ள அவர், கொரோனா தேசிய கட்டுப்பாட்டு செயலகத்தின் விசேட சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபரால் காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ் அதிபரின் உதவியாளராக நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர், ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் சாட்சியங்கள் எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டதாக பொலிஸின் முன்னாள் பேச்சாளரான ஜாலிய சேனாரத்ன ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இக்கூற்றை மையமாக கொண்டே அவர் இடமாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.