விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ´பொடி லெசி´க்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´ என்ற ஜனித் மதுசங்க பிணைவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (16) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.